சுவிட்சர்லாந்தில் சீனாவால் கண்காணிக்கப்படும் இனத்தவர்கள்!

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் திபெத்தியர்கள் மற்றும் உய்குர் இனத்தவர்கள் சீனாவால் கண்காணிக்கப்படுகிறார்கள் அல்லது தங்கள் சமூகத்தினரை வேவு பார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
பாசல் பல்கலைக்கழகத்திடம் நீதித்துறைக்கான பெடரல் அலுவலகம் ஒரு அறிக்கையை கேட்டிருந்தது. அதில், இரண்டு குழுக்களும் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது உட்பட பல வழிகளில் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்த குழுக்களுடன் தொடர்புடைய சுவிஸ் குடிமக்களும் கண்காணிக்கப்படுகிறார்கள்.
பாதிக்கப்படக்கூடிய குழுக்களை நாடுகடந்த அடக்குமுறையிலிருந்து பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகளை ஆராய்வதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.