Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்ப்பு!

சுவிட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்ப்பு!

சுவிட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Thurgau கான்டனின் Weinfelden பகுதியில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் இந்த சம்பவம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

மர்மமான முறையில் குறித்த நபர் உயிரிழந்து உள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் அதனை அறிவிக்குமாறும் போலீசார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

34 வயதான இலங்கையர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் சலனமற்ற நிலையில் கிடந்த குறித்த நபரை போலீசார் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர.

உயிரிழந்தவரின் சடலம் செட் கேலன் தடயவியல் மருத்துவ நிறுவகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் அதிகாலை வேலையில் நாய்கள் குறைத்ததாகவும் சிலர் சிரிக்கும் ஒலி கேட்டதாகவும் அருகாமையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயங்களுக்கும் குறித்த இளைஞரின் மரணத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை என குறிப்பிடப்படுகிறது.

போலீஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.