Tamil Swiss News

வாகன அனுமதிப்பத்திரம் இன்றி 1.5 வருடங்கள் பஸ் செலுத்திய Basel சாரதி

வாகன அனுமதிப்பத்திரம் இன்றி 1.5 வருடங்கள் பஸ் செலுத்திய Basel சாரதி

சுவிஸ் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வேலை செய்து பிடிபட்டதால், பாசலில் ஒரு பேருந்து ஓட்டுநர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தொழிலாக வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது குற்றம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் 1.5 வருடங்கள் நகரத்தில் பேருந்து ஓட்டுநராக இருந்துள்ளார்.

கொக்கேய்ன் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் போக்குவரத்து விதி மீறல் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு வாகனம் செலுத்தியுள்ளார்.

வாகன அனுமதிப்பத்திரம் இன்றி குறித்த நபர் எவ்வாறு 1.5 வருடங்கள் பஸ் செலுத்தினார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அதிகாரிகள் எவ்வித கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவருக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

குறித்த சாரதிக்கு 13 மாத கால சிறைத்தண்டனையும், சுமார் 6500 சுவிஸ் பிரஙர்குகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.