Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் சுமார் இரண்டாயிரம் போட்டியாளர்கள் பங்கேற்ற ஓட்டப் போட்டி!

சுவிட்சர்லாந்தில் சுமார் இரண்டாயிரம் போட்டியாளர்கள் பங்கேற்ற ஓட்டப் போட்டி!

சுவிட்சர்லாந்தில் சுமார் இரண்டாயிரம் போட்டியாளர்கள் பங்கேற்ற ஓட்டப் போட்டியொன்று பரீட்சார்த்த அடிப்படையில் நடாத்தப்பட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்திற்கு மத்தியில் ஐரோப்பிய வலயத்தில் நடைபெற்ற மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக இந்த நிகழ்வு கருதப்படுகின்றது.

மேற்கு சுவிட்சர்லாந்தின் Couvet ல் இந்தப் போட்டி நடாத்தப்பட்டுள்ளது.

48 மணித்தியாலங்களில் 650 போட்டியாளர்களைக் கொண்ட மூன்று குழுக்களாக இந்தப் போட்டியை நடாத்துவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்தப் போட்டியில் போட்டியாளர்களுக்கு இடையில் இடைவெளி பேணப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.

நியோசெட்டல் கான்டனில் இந்த பரீட்சார்த்த முயற்சி முன்னெடுக்கப்பட்டமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாக போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பெட்ரிக் கிறிஸ்டினாட் தெரிவித்துள்ளார்.

வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 500 தொண்டர்களும் 2000 ஓட்டவீரர்களும் பரீட்சார்த்த அடிப்படையில் போட்டியிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போட்டி ஆரம்பிக்கப்பட்ட போது அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன் 300 மீற்றர் ஓடியதன் பின்னர் அதனை அகற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

போதியளவு சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் இந்தப் போட்டி நடாத்தப்பட்டுள்ளது.