Tamil Swiss News

தடுப்பூசி பெற்றுக் கொண்டோருக்கு தனிமைப்படுத்த விலக்கு ?

தடுப்பூசி பெற்றுக் கொண்டோருக்கு தனிமைப்படுத்த விலக்கு ?

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து சுவிஸ் சுகாதார துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.


குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் என்றால் அவர்களை தனிமைப்படுத்தாதிருப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.


இந்த மாத இறுதியின் பின்னர் இந்த நடைமுறையை அமுல்படுத்துவதற்கு திட்டப்படப்பட்டுள்ளது.


உரிய முறையில் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் மற்றும் நோய்த் தொற்று ஏற்பட்டு பூரண குணமடைந்துவிட்டதனை உறுதி செய்யக் கூடியவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


சுவிட்சர்லாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் பல்வேறு வழிகளில் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறான ஓர் பின்னணியில் தனிமைப்படுத்தல் குறித்த கட்டுப்பாட்டிலும் அரசாங்கம் சில தளர்வுகளை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.


எதிர்வரும் நாட்களில் புதிய தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் அதிகாரபூர்வமான அறிவிப்புக்களை அரசாங்கம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.