Tamil Swiss News

சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக நிலவும் மோசமான காலநிலை

சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக நிலவும் மோசமான காலநிலை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, சாலைப் போக்குவரத்துக்கள் முடங்கியுள்ளன.

புதன்கிழமை முதல் சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பொழியும் பனி வீழ்ச்சி அதிக அளவில் உள்ளதெனவும், இதனால் பனிச்சரிவுகளின் ஆபத்து மிக அதிகமாக உள்ளதாகவும், சுவிஸ் வானிலை அறிக்கை இன்று காலை தெரிவித்துள்ளது.

சில பிராந்தியங்களில் பனி வீழ்ச்சியின் அளவு 30 சென்டிமீட்டரைத் தாண்டியுள்ளதாகவும், கிழக்கு ஆல்ப்ஸின் பள்ளத்தாக்குகளில் அரை மீட்டருக்கும் அதிகமாகவும், ஆல்ப்ஸின் மத்திய பகுதியில் 100 முதல் 200 சென்டிமீட்டர் வரையும் பதிவாகியுள்ளதாகவும் கடந்த 20 வருடங்களின் பின்னதானகடும் பனிப்பொழிவு இது எனவும் தெரிவிகப்படுகிறது.

சுவிஸ் ஜெர்மன் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையான SRF, வானிலை ஆய்வு சேவையின் படி, கடந்த இரண்டு நாட்களில் 96 சென்டிமீட்டர் பனி கிளாரஸ் பகுதியில் பொழிந்துள்ளதாகவும், இது ஜனவரி 29, 1982 இன் 48 மணி நேர எண்ணிக்கையை விட 10 மில்லிமீட்டர் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனம்வெளியிட்டுள்ள பனிச்சரிவு அபாய அறிவிப்பில், இன்று முழு ஆல்ப்ஸ் தொடர் பள்ளத்தாக்குகளில், அபாயம் வலுவானதாகவுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

சூரிச்சில் சாலைப் போக்குவரத்து பல இடங்களிலும் பாதிப்புற்றுள்ள போதிலும், விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து தடைப்படவில்லை எனவும், விமான நிலையப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 33 சென்டிமீட்டர் பனி பெய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமான பனிப்பொழிவு இடம்பெற்றமையால் வீதிகள் மற்றும் புகையிரத மற்றும் ராம், பஸ் வலையமைப்பில் பல குழப்பத்தை உருவாக்கி வருகின்றது.

அதிலும் பிரதானமாக பேர்ண், ஊரி, பாசல்,சூரிச் மாநிலங்களின் பெரும்பகுதிகளில் மக்கள் போக்குவரத்து நடைமுறையில் பல தாமதங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நேற்றைய தினம் குறப்பாக சூரிச் மாநில நகர்பகுதிக்கான ராம் மற்றும் பஸ் சேவைகள் பாதைகள் பாதிக்கப்பட்டமையால் நிறுத்திவைக்கப்பட்டிருந்து இன்றைய தினம் காலை மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சேவைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சூரிச் நகரின் சில பகுதி மற்றும் லிமற்றாள் பகுதிக்கான ராம், பஸ் வலைப்பின்னலை வழங்கும் நிறுவனம் தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளதாக சூரிச் மாநகர பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது அத்துடன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு சேவைகள் இடம்பெறாமையினால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவே உங்கள் பயணத்தை நேரதாமதங்களை கணக்கில் கொண்டு திட்டமிடுமாறு வேண்டப்படுகிறீர்கள்.