Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,098 பேருக்கு கொரோனா தொற்றுகள்.

சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,098 பேருக்கு கொரோனா தொற்றுகள்.

சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,098 பேருக்கு கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கின்றது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை ஆக்கிரமித்து கோடி கணக்கான உயிர்களை பழிவாங்குகின்றது.

மேலும் இந்த கொரோனா தொற்று நீக்கும் வகையில் தடுப்பூசியொன்றை உருவாக்க உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பல நாடுகளில் கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

சுவிசர்லாந்தில் கொரோனா தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி வருகிறது.

இதனடிப்படையில், நேற்று (07.11.2020) சுவிஸ் சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஒரு நாளில் நாட்டில் 10,098 புதிய கொரோனா தொற்றுகள் உருவாகியுள்ளது.

மேலும், 73 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், சுவிட்சர்லாந்து மற்றும் சிறிய அண்டை நாடான லிச்சென்ஸ்டீனில் மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 211’913 ஆக உயர்ந்துள்ள நிலையில் 2’407 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடந்த்தக்கதாகும்.