Tamil Swiss News

சுவிசில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தீவிரவாத குற்றம் சாட்டப்பட்டவர்கள்; திடுக்கிடும் தகவல்.

சுவிசில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தீவிரவாத குற்றம் சாட்டப்பட்டவர்கள்;  திடுக்கிடும் தகவல்.

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் திங்களன்று நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவர் ஏற்கனவே தீவிரவாத குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற திடுக்கிடவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.


மற்றும் 2019 இல் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் இன்னமும் நடந்துகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான 24 வயது இளைஞர் ஒருவர், வழக்குகளில் ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர், 18 வயதுடைய மற்றொருவர் வயதுக்கு வராதவர், அல்லது சிறுவர் என்ற நிலையில், விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.


இந்நிலையில், தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ள அந்த 18 வயது இளைஞர், பல ஆண்டுகளாக தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர் என ஏற்கனவே பொலிசாருக்கு அறிமுகமானவர் என சூரிச்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வியன்னாவில் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தி நான்கு பேரைக் கொன்ற நபரை, சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஏற்கனவே தெரியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும், தற்போது தாங்கள் ஆஸ்திரிய அதிகாரிகளுடன் இணைந்து, இந்த மூன்று குற்றவாளிகளுக்கும் என்ன தொடர்பு என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.