Tamil Swiss News

அகதி அந்தஸ்தை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

அகதி அந்தஸ்தை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

குடியேற்றத்திற்கான சுவிஸ் அரசு செயலகம் (SEM) 2017 ஆம் ஆண்டில் 231 பேரின் அகதி அந்தஸ்துகளை திரும்பப்பெற்றது, இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 37.2% அதிகம்.

சனிக்கிழமையன்று, ஒரு SEM செய்தித் தொடர்பாளர், Schweiz am Wochenende வெளியிட்ட புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்தினார்.

அந்த அகதிகள் அவர்களது சொந்த நாட்டில் ஆபத்து இருப்பதாக கூறினாலும், அவர்களது நாட்டிற்கு சென்றுவந்துள்ளனர். வியட்நாம் நாட்டினர் (71 பேர்), அவர்களை தொடர்ந்து ஈராக்கியர்கள் (60) மற்றும் போஸ்னியா மற்றும் ஹெர்ஜிகோவினா (30) ஆகிய நாடுகளை சேர்ந்த குடிமக்களின் அகதி அந்தஸ்துக்கள் திரும்பப்பெறப்பட்டன.

2015 ஆம் ஆண்டில், "வீட்டுக்கு திரும்புதல்" பணியை உருவாக்கியது மற்றும் மாகாண குடிபெயர்வு அதிகாரிகளின் நல்ல ஒத்துழைப்பு ஆகிய காரணங்களால் 86 வழக்குகள் அதிகரித்தன. சுங்க அதிகாரிகளால் வழங்கப்பட்ட பயணிகள் தரவுகளின் சுலபமான பகுப்பாய்வும் தங்களது சொந்த நாட்டுக்கு சென்று திரும்பிய அகதிகளை அடையாளம் காண உதவியது.

பர்டன் ஆஃப் ப்ரூஃப் (Burden of proof)

மார்ச் மாத தொடக்கத்தில், பெடரல் கவுன்சில், தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்லும் அகதிகள் மீதான தடை விண்ணப்பத்தை வலுப்படுத்த பரிந்துரைத்தது. ஏற்கெனவே இருக்கும் விதி, ஆட்சி சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டு, Burden of proof மாற்றியமைக்கப்படும்.

தங்கள் சொந்த நாட்டை அடைந்த அகதிகள் அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் அந்த நாட்டு பாதுகாப்பின் கீழ் தங்களை அர்ப்பனித்துக் கொண்டனர் என்று சட்டம் கருதிக்கொள்ளும். அத்தகைய நபர்கள் அவர்களின் அகதி அந்தஸ்தை திரும்பப் பெறும் நடைமுறை ஆரம்பிக்கப்படும்போது இது அதனுடன் சம்பந்தப்பட்ட வழக்கு அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். பாராளுமன்றம் இன்னும் இந்த சட்டத்தை அங்கீகரிக்கவில்லை.

(Image: www.swissinfo.ch)