பிரேசிலில் உள்ள சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 10பேர் பலியாகியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரேசிலின் வட கிழக்கில் செரா நகரம் உள்ளது. இங்குள்ள சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று அங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 10பேர் உயிரிழந்தனர் எனவும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தகவலறிந்த சிறைக்காவலர்களும், பொலிஸாரும் விரைந்து சென்று கலவரத்தை அடக்கினார்கள்....